கொழும்பில் சுற்றித்திரிந்த ATM அட்டை திருடிய நபர் கைது!
பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை திருடி, வங்கி கணக்கில் பணத்தை திருடிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொம்பே கபுகொட பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த 2 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ATM இயந்திரங்களில் இருந்து திருடப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் CCTV காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர் அதிகாரியிடம் 4 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்த 10 திருடப்பட்ட ATM அட்டைகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 Views
Comments