சிறைச்சாலைக்குள் அந்தரங்க பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை மறைத்து கொண்டு வந்த நபர் கைது!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

சிறைச்சாலைக்குள் அந்தரங்க பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை மறைத்து கொண்டு வந்த நபர் கைது!

சிறைச்சாலைக்குள் அந்தரங்க பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை மறைத்து கொண்டு வந்த நபர் கைது!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்ற கைதி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சிறைக் கைதிகள் மற்றும் ஊழியர்களிடம் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குறித்த கைதி, சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி துப்புரவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட சிறைச்சாலைக்குள் பிரவேசிக்கும் போது மலக்குடலில் மறைத்து 9 பிடியை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான கைதி ஒருவராவார்.

views

64 Views

Comments

arrow-up